சிறப்பு செய்திகள்

7.5 சதவீத இடஒதுக்கீட்டால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது – எதிர்க்கட்சித்தலைவர் மகிழ்ச்சி

சென்னை

அம்மா அரசால் உருவாக்கப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கிட, எனது தலைமையிலான அம்மாவின் அரசால் உருவாக்கப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டாலும், கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற ஆணையாலும் இந்த ஆண்டு 500-க்கும் மேற்ப்பட்ட ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகிருப்பதில் மட்டற்ற
மகிழ்ச்சி.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.