சிறப்பு செய்திகள்

மகாத்மா காந்தி நினைவு நாளில் அன்பு மேலோங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம்- எதிர்க்கட்சித்தலைவர் அழைப்பு

சென்னை

மகாத்மா காந்தி நினைவு நாளில் அன்பு மேலாங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறான் எனும் உயரிய சிந்தையோடு, அகிம்சை, சத்தியம் எனும் அறவழியை உலகுக்கு அளித்து, இந்திய சுதந்திர வெற்றிக்கு வித்திட்ட மாமனிதர், நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவுநாளில், அனைவரும் அன்பு மேலோங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.