நமது அம்மா ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

மதுரை,
அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட், பாரதி யுவகேந்திரா சார்பில் நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருதை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி.குண்ணத்தூர் அம்மா யோக மணிமண்டபத்தில் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் பாரதி யுவகேந்திரா சார்பில் மனிதநேயப் மாண்பாளர் விருது, தன்னிகரில்லா தலைமை பண்பு என்ற தலைப்பில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய தலைப்புகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும், 9 10 மற்றும் பிளஸ்1, பிளஸ்2 மாணவ என மூன்று பிரிவுகளாக மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. மேலும் சங்கத்துக்கு வாங்க சிரிக்கலாம் என்ற தலைப்புகளில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். பாரதி மகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார், கழக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருமான மருது அழகுராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக ரூ. 2 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.1000, மூன்றாம் பரிசாக ரூ.500 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் பங்கேற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து நமது அம்மா ஆசிரியர் மருது அழகுராஜ் அவர்களுக்கு மனிதநேய மாண்பாளர் விருதினை விழா கமிட்டி சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், எம்.வி.கருப்பையா, பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.