சிறப்பு செய்திகள்

பேரறிஞர் அண்ணா காட்டிய அறவழியில் பயணிப்போம்- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

சென்னை, பிப். 4-

பேரறிஞர் அணணா காட்டிய அறவழியில் பயணிப்போம் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சமதர்ம சிந்தனை, சமூக நீதி, மொழி உணர்வு, மக்கள் நலம் ஆகியவற்றோடு விசாலமான தனது உள்ளத்தாலும் தமிழக மக்களின் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் கொண்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் அவரின் சீரிய சித்தாந்தங்களை பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.