தற்போதைய செய்திகள்

பொய் வாக்குறுதியால் ஏமாற்றிய தி.மு.க.வுக்கு பதிலடி கொடுங்கள் – கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி பிரச்சாரம்

சென்னை

பொய் வாக்குறுதியால் ஏமாற்றிய தி.மு.க.வுக்கு பதிலடி கொடுங்கள் என்று நங்கநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கூறினார்.

சென்னை மாநகராட்சி 167-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் ஹேமா பரணிபிரசாத்தை ஆதரித்து கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி நேற்று

ஆலந்தூர் கிழக்கு பகுதி நங்கநல்லூரில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள 5 பவுன் நகைக் கடன் ரத்து என்று பொய் வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றியுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடியை நம்பி சுமார் 50 லட்சம் மக்கள் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து தற்போது கடனாளியாக ஆகி விட்டார்கள். இத்தகைய பொய் வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க.விற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

எனவே 167-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் ஹேமா பரணிபிரசாத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி பேசினார்.