இரட்டைமலை சீனிவாசன் புகழை நினைவு கூர்கிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம்

சென்னை
கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம் என்று முழங்கிய இரட்டைமலை சீனிவாசனை நினைவு கூர்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்” என்று முழங்கி, விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து, வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக போராடிய சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி நினைவு கூர்கிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.