தற்போதைய செய்திகள்

‘நீட்’டை ரத்து செய்யாவிட்டால் தி.மு.க. வை மக்கள் ரத்து செய்வர் – மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி உறுதி

ராமநாதபுரம்

நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தி.மு.க.வை மக்கள் ரத்து செய்வார்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார்.

பரமக்குடி நகராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி மற்றும் கழக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:-

நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இருப்பினும் தி.மு.க. அரசின் 9 மாத கால அவல ஆட்சியை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

திருடர்கள் கையில் தமிழகம் இருக்கிறது. அதை நாம் மீட்டெடுக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட முடியாது. நல்லவராக இருப்பவர்கள் யாரும் தி.மு.க.வில் இருப்பதில்லை. திமுகவில் இருப்பவர்கள் யாரும் நல்லவர்கள் இல்லை.

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என் கூறி தி.மு.க. ஆட்சி வந்தது. ஆட்சிக்கு வந்ததும் அதை மறந்து விட்டார்கள். நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தி.மு.க.வை மக்கள் ரத்து செய்வார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க. படுதோல்வி அடையும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.