சிறப்பு செய்திகள்

‘புரட்சித்தலைவி அம்மா’ பிறந்த நாளில் ஏழை- எளிய மக்களுக்கு உதவி செய்வீர்

கழக நிர்வாகிகள்- உடன்பிறப்புகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள்

சென்னை,

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஒப்புதலோடு தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு 24-ந்தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதோடு நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள சிறப்பு மலரை வெளியிட உள்ளார்கள்.

மேலும் புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.