தற்போதைய செய்திகள்

மதுரை புறநகர் மாவட்டத்தில் 5000 பேருக்கு அன்னதானம்-கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்

மதுரை,

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதன் பின்னர் மேலூர், அழகர்கோயில், ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மொத்தம் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழக நிர்வாகிகள் அம்பலம், ஓம்.கே.சந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மேலூர் பி.எஸ்.துரைப்பாண்டி, ஒன்றிய கழக செயலாளர்கள் பொன்.ராஜேந்திரன், வாசு என்ற பெரியண்ணன், குலோத்துங்கன், கார்சேரி கணேசன்,பகுதி கழக செயலாளர்கள் அவனியாபுரம் முருகேசன், சரவணன், பன்னீர்செல்வம், மாவட்ட அணி நிர்வாகிகள் மோகன்தாஸ், பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார் வட்டக் கழக செயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.