தற்போதைய செய்திகள்

பெரம்பலூரில் அம்மா பிறந்தநாள் விழா – ஏழை, எளிய மக்களுக்கு கழகம் நலத்திட்ட உதவி

பெரம்பலூர்,

பெரம்பலூரில் நடைபெற்ற புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு இருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதன் பின்னர் பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், வேஷ்டி, சேலை, தென்னங்கன்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பாக கவுதம புத்தர் காது கேளாதோர் அறக்கட்டளையில் 100 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆயிரம் பேருக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர கழக செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய கழக செயலாளர்கள் பெரம்பலூர் செல்வகுமார், ஆலத்தூர் கிழக்கு கர்ணன், வேப்பந்தட்டை மேற்கு, சிவப்பிரகாசம் , வேப்பந்தட்டை கிழக்கு ரவிச்சந்திரன், ஆலத்தூர் மேற்கு வழக்கறிஞர் சசிகுமார், வேப்பூர் வடக்கு செல்வமணி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தங்க.பாலமுருகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் இளஞ்செழியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள், வழக்கறிஞர் பிரிவு கதிர். கனகராஜ், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் கே.என்.ராமசாமி, வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கணேசன், நாட்டார்மங்கலம் வி.என்.ஆர்.நாகராஜ், கார்த்திக், தினேஷ், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.