சட்டசபை துதிபாடும் ஜால்ரா சபையாக மாறி விட்டது- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை,
அ.தி.மு.க சார்பில் சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கோடை காலத்தில் மக்கள் தாகத்தை தீர்க்கும் வகையில் பந்தல் அமைத்து வருகிறது, வேறு எந்த கட்சியும் தண்ணீர் பந்தல் திறக்கவில்லை என்ற அவர், அரசை பொWத்தவரையில் மக்கள் எப்படி போனாலும் பிரச்சனை இல்லை என்று இருக்கிறது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துள்ளது என்றார்.
மேலும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் நடவடிக்கைகள் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பாக இருந்தது. திமுக ஆட்சியில், கொலை, கொள்ளை, கடத்தல் போன்றவை சாதாரணமாக நடைபெறுகிறது.
காலம் காலமாக இருக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. மக்களை பற்றி கவலைப்படாத அரசாக, விளம்பரத்திற்கான அரசாக, ஸ்டண்ட் அரசாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்டண்ட் மேனாக செயல்பட்டு வருகிறார்.
காவல்துறை தப்பிற்கு காவல்துறை விசாரணையா? தி.மு.க ஆட்சியில் தான் 5 பேர் லாக்கப்பில் மரணம் ஆகி உள்ளனர் அதற்கு முதல்வர் தான் பதில் கூற வேண்டும் என்றார். மேலும், சட்டசபை துதிபாடும், ஜால்ரா சபையாக மாறிவிட்டது, ஜனநாயகப்படி சட்டப்பேரவை நடைபெறவில்லை.
மத விவகாரத்தில் அரசு மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும் என்ற அவர், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெட்ரோல் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது, இதற்கு தி.மு.க தோழமை கட்சிகள் தமிழக அஅரசுக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்தவில்லை? .
மேலும், திமுகவில் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை திமுகவில் பலர் அமைச்சர்களாக உள்ளனர். இன்னும் நிறைய பேர் திமுகவில் இருந்து தொடர்ந்து வெளியேறுவார்கள்.
திமுக இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றால் ஆல் அட்ரஸ் இல்லாமல் போய் இருக்கும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்.
தேர்தலுக்காக நிறைய வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து விட்டு தற்போது அதனை நிறைவேற்றமால் நிதி பற்றாக்குறை என்று நிதியமைச்சர் தெரிவிக்கிறார். மீனவர்களின் பாதுகாப்பிற்காக பேசக்கூடியவர்கள், எழுத்தளவில் மட்டும் தான் கடிதம் எழுதியிருக்கிறார்.
மீனவர்கள் பாதுகாப்பிற்கு என்ன கடிதம் எழுதினார்கள். எழுத்து அளவில் மட்டும் தான் கடிதம் எழுதி இருக்கிறார்கள் என்ற அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கூறினார்கள் ஆனால் தற்போது 24 மணி நேரமும் தற்போது செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.