வாழை விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும்

பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தல்
சென்னை,
சூறாவளிக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் பேரவையில் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று அவசர பொது முக்கியத்துவம் வாழ்ந்த நிகழ்வு குறித்த விவாதத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிற சூறாவளிக்காற்றில் வாழைகள் பல
பகுதிகளில் கோவை, ஈரோடு, தருமபுரி, சேலம் டு தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி போன்ற மாவட்டங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றது.
பெரும் சேதங்கள் ஏற்படுகின்றபோது பிரதமரின் திட்டத்தில் பிர்கா அளவில் விழுந்தால் அதற்கு காப்பீடு வழங்க இயலும். ஆகவே இதுபோன்ற பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கின்ற விவசாயிகள் நலன் கருதி, தமிழக அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று அரசின் கவனத்தை ஈர்த்தார்.