திருப்பூர்

மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது தி.மு.க-திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பேச்சு

திருப்பூர்

மக்கள் விரோத ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றது திமுக என்று திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சி.மகேந்திரன் எம்.எல்.ஏ பேசினார்.

மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத போக்கை கையாளும் விடியா திமுக அரசை கண்டித்து திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டம் தலைமையில் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட சி.மகேந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளில் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என முடிவு செய்தவர் எடப்பாடியார் ஆவார். இன்று ஓராண்டு காலம் பதவியேற்ற திமுக கழக அரசு மக்களுக்கு எத்தனை விதமான இடையூறுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள். வீட்டு வரி உயர்வு, கட்டுமான பொருட்கள் உயர்வு, அனைத்து நிலையில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு என்று மக்களை வாட்டி வதைக்கிறத விடியா அரசு.

பட்ஜெட் போடுகிறார்கள். வரியில்லாத பட்ஜெட் என்று பொய்யான ஒரு தகவலை பரப்புகிறார்கள். அவரோடு கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் தி.மு.க.வுக்கு துதி பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு துறை வாயிலாகவும், கூடுதலாக வரி, கட்டணத்தை கூடுதலாக நியமித்தும் வருகின்றனர். இது கையாலாகாத தி.மு.க அரசின் கொள்கையாக ஆகி விட்டது.

கடந்த காலங்களில் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போது அம்மா அறிவித்த 100 யூனிட் இலவச மின்சாரத்தை கட்டணமில்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு அதே நிலையை நீடித்து உத்தரவிட்டார். திமுக.வினர் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்வோம் என்று கூறினார்கள்.

ஆனால் மாதந்தோறும் கணக்கெடுக்கவில்லை கையாலாகவில்லை. மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கு என்றைக்குமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க.வினர்.

மக்களுக்கு பயன்படுகின்ற அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கிறோம் என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள். புரட்சித்தலைவி அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது. தாலிக்கு தங்கம், மகளிருக்கு இரு சக்கர வாகனம் என அம்மா அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி விட்டார்கள்.

ஏழை எளிய மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்த விளங்க வேண்டும் என்ற பறந்த நோக்கில், கனவிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத திட்டமான மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தார். அதையும் நிறுத்தி விட்டார்கள். மற்ற பணிகளுக்கெல்லாம் நிதி ஒதுக்க முடிகிறது. மக்களும் மாணவர்களும் பயன்படுகின்ற திட்டங்களுக்கு நிதி இல்லையாம். மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற அரசு தான் திமுக அரசு.

தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றாத அரசு தான் திமுக அரசு, மாதம் ஒவ்வொரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறினார்கள். ஆனால் வழங்கவில்லை. கேஸ் 100 ரூபாய் மானியம் கொடுப்பதாக கூறினார்கள் அதையும் வழங்கவில்லை. மக்களுடைய பயன்பாடு குறித்து சிந்திக்க கூடிய அரசாக திமுக அரசு இல்லை.

இதனை பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். விரைவில் திமுக ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். தமிழகத்திலிருத்தது திமுக அகற்றப்பட வேண்டிய ஆட்சி. இன்று குடிநீர் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள்.

கொரோனா காலத்தில் கூட எவ்வித கடன் பளூவும் இல்லாமல் ஆட்சி செய்தவர் எடப்பாடியார் ஆவார். ஆகவே தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் அப்போது தான் தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்கள் நிறைவேறும் சலுகைகள் பெற முடியும்.

புரட்சித்தலைவி அம்மாவால் வழங்கப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை என்றாலும். கழக ஆட்சியால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாத கையாலாகாத அரசு தான் திமுக அரசு.

இவ்வாறு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி. மகேந்திரன் எம்.எல்.ஏ. பேசினார்.