கோர தாண்டவமாடும் அநீதி-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் டுவிட்

சென்னை
தமிழகத்தில் அநீதி கோர தாண்டவமாடுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மேயரின் நிகழ்ச்சி நிரலில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி. சட்டம் ஒழுங்கு மடிந்து கிடக்கு, விலைவாசி ஏறி கிடக்கு, அடிப்படை வசதி தூங்கி கிடக்கு. கேளிக்கையில் மூழ்கி தலைவர் ஊட்டியில் நடனமாட அமைச்சர்கள், மேயர்கள் வாரிசின் நடிப்புக்கு விசில் ஊத தமிழகத்தில் அநீதி கோர தாண்டவமாடுகிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்துள்ளார்