தமிழகம்

முத்தமிழுக்கு மெய்கீர்த்தி கண்டவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம்

சென்னை,

முத்தமிழுக்கு ெமய்கீர்த்தி கண்டவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

முத்தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட ஆற்றல் மிக்க பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர். திருச்சி மாநகரில் அம்மா அவர்களால் சிலை நிறுவி கவுரவிக்கப்பட்ட மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது சதய விழா நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.