விடியா அரசின் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் குற்றச்சாட்டு
திருவள்ளூர்
விடியா தி.மு.க. அரசின் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் பேசினார்.
இதுகுறித்து பூந்தமல்லி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான இரா.மணிமாறன் கூறியதாவது:-
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிட்டு ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத்துறை என்ற போர்வையில் கழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்த செய்து வருகிறார். மின் கட்டண உயர்வு, சொத்து வரி ஆகியவற்றால் தமிழக மக்கள் அவதிப்பட்டு வரும் வேலையில் அதனை மறைப்பதற்காகவே தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த நேரம் முதல் தமிழக மக்களுக்கு இருண்ட காலம் ஆரம்பம் ஆகிவிட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடி வருகிறது. சர்வாதிகார போக்கை கையில் எடுத்து உள்ள ஸ்டாலினுக்கு வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தமிழகத்திற்கு விடியலை கொண்டு வருபவர் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பத்மநாபன், ஒன்றிய அவைத்தலைவர் ஏழுமலை, ஒன்றிய பொருளாளர் சரவணன், மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி உஷா குணசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் உமாசந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் விஜய கருணாகரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கிரண்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் தாங்கள் சுப்பன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் காவேரி தேவராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் விஜய சுகுணா, நசரத்பேட்டை கிளை செயலாளர் நாகரத்தினம், மேலவை பிரதிநிதி ஜெய்சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.