பத்திரிகை துறையை வளர்த்தெடுத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் சி.பா.ஆதித்தனார்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம்
சென்னை,
பத்திரிகை துறையை வளர்த்தெடுத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் சி.பா.ஆதித்தனார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் 41-வது ஆண்டு நினைவு நாளையொட்டி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பத்திரிகை துறையை வளர்த்தெடுத்து, அதன் மாண்பை நிலைநாட்டி, தன்னிகரில்லா புகழை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த திருமகனார் சி.பா.ஆதித்தனாரின் நினைவை போற்றுவோம்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.