நாகர்கோவில் மாநகராட்சி கட்டித்துக்கு கலைவாணர் பெயர்கழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி-முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் அறிக்கை

கன்னியாகுமரி
நாகர்கோவில் மாநகராட்சி கட்டிடத்துக்கு கலைவாணர் பெயர் வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது கழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக புதிய கட்டிடத்திற்கு கலைவாணர் பெயரை வைப்பதற்கு அன்றைய மாநகராட்சி ஆணையரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த சூழ்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் புதிய அலுவலக கட்டிடத்திற்கு மக்கள் விருப்பத்திற்கு மாறாக கலைஞர் மாளிகை என்று பெயர் வைக்க தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளார்.
இதனை கண்டித்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை கழகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடந்த 29-ந்தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக புதிய கட்டிடத்திற்கு கலைவாணர் பெயரையே வைக்க வேண்டும் என்றும், இதற்கு மாறாக செயல்படும் நாகர்கோவில் தி.மு.க மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அரசு நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்திற்கு கலைவாணர் பெயரே தொடரும் என அறிவித்துள்ளது. இது கழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மகத்தான வெற்றி.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ெதரிவித்துள்ளார்.
–