சிறப்பு செய்திகள்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை,

62-வது பிறந்தநாளை கொண்டாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

தனது 62-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இந்நன்னாளில் அவர் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதற்கு தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.