சிறப்பு செய்திகள்

காயிதே மில்லத் நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை – தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 127-வது பிறந்த நாளையொட்டி வருகிற 5-ந்தேதி அன்று சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மலர்போர்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளனர்.

இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலுடன் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு, 5.6.2022 – ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுடைய நினைவிடத்தில்,

கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில், தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட கழக செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்,

கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவை சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.