சிறப்பு செய்திகள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பிதழுடன் தவறாமல் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி அன்று சென்னை வானகரத்தில் தற்காலிக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கிறது என்று கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 – வியாழக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.

உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து , கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்