தற்போதைய செய்திகள்

உணவு பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம் -எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

சென்னை

உணவு பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நீண்ட ஆரோக்கியமான வாழ்விற்கு பாதுகாப்பான உணவு அவசியம். காலத்திற்கு ஏற்ப மாறி வரும் உணவு முறைகளால், உடல் பாதிப்புகள் அதிகரித்து “மருந்தே உணவு” என்ற நிலையை அடைந்து வருவது கவலை அளிக்கிறது. உயிரை காக்கும் உணவு பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம்.

“உணவே மருந்து” என்ற வள்ளுவரின் கூற்றிற்கேற்ப, உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதிற்கு வலிமையையும் தரும் பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றுவோம். பாதுகப்பற்ற உணவு முறைகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ உறுதியேற்போம்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்