தற்போதைய செய்திகள்

தி.மு.க.வினரை ஊருக்கு, ஊர் விரட்டி அடிப்பார்கள்-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

மதுரை

குடும்ப தலைவிகளுக்கு மாதமாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை. தி.மு.க.வை ஊருக்கு, ஊர் விரட்டி அடிப்பார்கள்.

மின் கட்டண உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

தி.மு.க.வுக்கும் அண்ணாவுக்கும் என்ன சம்பந்தம், அண்ணாவின் கொள்கையை குழி தோண்டி புதைத்தவர்களே தி.மு.க.வினர் தான். ஆனால் தற்போது திராவி மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க., விபத்தில் ஜெயித்து விட்டார்கள். 3 லட்சம் ஓட்டில் மாறி விட்டது. அடுத்த முறை அ.தி.மு.க அமோகமாக வெற்றிபெறும். அதிமுக உலகத்தரம் வாய்ந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஆனால் தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

தமிழ்நாட்டிற்கே நிதி ஒதுக்கும் நிதி அமைச்சர் அவரின் தொகுதியில் கூட ஒன்றுமே செய்யவில்லை. தி.மு.க ஆட்சியில் கட்சியும், கண்ட்ரோல் இல்லை. ஆட்சியும் கண்ட்ரோல் இல்லை. ஆ.ராஜா பேசியதற்கு நீக்கி இருக்க வேண்டும்.
2ஜி ஊழலில் உலக அளவில் பெயர் பெற்றவர் ஆ.ராஜா. அவர் இந்துக்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்.

ஆ.ராஜாவை இந்நேரம் நீக்கி இருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினை இயக்குவது யார், மருமகன் சபரீசன். அதில் முதல்வர் தலையீடுவதே இல்லை. ஸ்டாலின் டிவி, போட்டோவுக்கு போஸ் கொடுங்கள் என சபரீசன் அனுப்பி வைத்து விடுகிறார். முதல்வர் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கருணாநிதி ஆட்சி காலத்தில் மண்டலமாக பிரிக்கப்படும். இப்போது அதுவும் இல்லை. கனிமொழிக்கு அதில் இடமில்லை. முதல்வர் பொம்மை மாதிரி என்ன பொம்மை நவராத்திரியில் வைப்பாங்களே அந்த பொம்மை போல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று போஸ் கொடுக்கிறார். தி.மு.க ஆட்சியை பார்த்து கோபப்படக்கூடாது.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் பிரகாஷ்ராஜ் கோபம் வந்தால் சிரிப்பார். அதைப்போல் தி.மு.க ஆட்சியை பார்த்து கோபப்படாமல் சிரித்து விட வேண்டும். இல்லை என்றால் பிரஷர் ஏற்படும். அம்மா மினி கிளினிக்கிற்கு மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது.

ஆனால் மக்களை தேடிய மருத்துவத்தை கூட தி.மு.க முறையாக செயல்படுத்தவில்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை. இனியும் கொடுக்கவில்லை என்றால் தி.மு.க.வினரை ஊருக்கு, ஊர் விரட்டி அடிப்பார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.