கழக ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சூளுரை
தூத்துக்குடி
தி.மு.க.வின் ஆட்டம் நீண்ட நாள் நிலைக்காது. அ.தி.மு.க ஆட்சி மலரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கூறி உள்ளார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:-
தி.மு.க.வின கட்சியின் எல்.பி.எப். மற்றும் சிஐடியு உட்பட திமுக தோழமையுள்ள 8 சங்கங்களின் கூட்டமைப்பினர் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியின் போது 5-1-2021 மற்றும் 18-2-2021 அன்று இ ரண்டு முறை போக்குவரத்து தொழிலாளர்களுக்காக நடைபெற்ற 14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையின்போது தொழிலாளர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு மற்றும் பல செயல்படுத்த முடியாத கோரிக்கைகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்தினார்கள்.
அப்போது அம்மாவின் நல்லாட்சியின் முதல்வராக பதவி வகித்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கியதையும் குறை கூறினர்.
ஆனால் தற்போது அதே தி.மு.க.வின் ஆதரவு சங்கங்கள் 12-5-2022 அன்று அரசு சார்பில் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர் களுக்கான ஊதிய உயர்வு பற்றி நடந்த பேச்சுவார்த்தையின் போது தி.மு.க.வை சேர்ந்தஎல்.பி.எப். அதன் ஆதரவு சங்கங்களான சிஐடியு போன்ற 8 சங்கங்கள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வை கேட்காமல் திமுக அரசு சார்பில் கூறப்பட்ட 5. சதவீத ஊதிய உயர்வை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு.
திமுக அரசை பாராட்டியும் திமுக அரசின் போக்குவரத்து துறை அமைச்சரையும் பாராட்டி பேசி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் நடந்துள்ளனர்.
மேற்படி கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் 1.9.2019 முதல் 31.12.2021 வரை 2 சதவீத ஊதிய உயர்வும் அதேபோல் 1. 1. 2022. முதல் 3 சதவீத ஊதிய உயர்வை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்ததற்கு ஊதிய உயர்வை பற்றி பேசக்கூடிய கூட்டு குழுவில் உள்ள சங்கங்களை சேர்ந்தவர்கள் எந்த எதிர்ப்பையும் திமுக அமைச்சருக்கு தெரிவிக்காமல் அமைச்சர் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.
திமுக அமைச்சர் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று திமுக அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மட்டும் தான் தெரிவித்தனர் என்பதை தமிழகத்திலுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
தற்போது அதிமுக போக்குவரத்து தொழிலாளர்களை பழிவாங்கும் எண்ணத்தில் மண்டலம் விட்டு மண்டலம் மாற்றி வருவதை உடனே அரசு கைவிட வேண்டும். சமீபத்தில் ஸ்ரீவைகுண்டம் டிப்போவில் திமுக போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தூண்டுதலின் பேரில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 6 தொழிலாளர்களுக்கு ஆப்சென்ட் போட்டு பணிமனை மேலாளர்கள் பழி வாங்கியுள்ளனர்.
இதுபோன்ற தொழிலாளர்களுக்கு விரோதமான போக்கை தி.மு.க அரசு உடனே கைவிட வேண்டும் தற்போது திமுக அரசு ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் உள்ளது என்று ஆடுகின்றது. தி.மு.க.வின் ஆட்டம் நீண்ட நாள் நிலைக்காது. அ.தி.மு.க ஆட்சி மலரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
திமுக அரசு உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை அதிகரித்து வழங்க வேண்டும். அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்களை பழிவாங்கும் செயலை உடனே தி.மு.க. அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி அ.தி.மு.க தலைவர் வழக்கறிஞர் வீரபாகு. தூத்துக்குடி மாநகராட்சி கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சரவணபெருமாள், போக்குவரத்து மண்டல தலைவர் எட்வர்ட் அந்தோணிராஜ். மண்டல இணை செயலாளர் லட்சுமணன், சாத்தான்குளம் பணிமனை செயலாளர் சுந்தரபாண்டியன், ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் காசிராஜன், கிளை தலைவர் பொன் ராஜா, துணைத்தலைவர் மணிகண்டன், கழக இணை செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் பாத்திமா நகர் சுரேஷ், வட்ட செயலாளர் மனுவேல் ராஜ்.சகாயராஜ், சாம்ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.