தற்போதைய செய்திகள்

மார்சல் நேசமணியின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

சென்னை,

மார்சல் நேசமணியின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைப்பதற்கு பல போராட்டங்கள் நடத்தி, அரும்பாடுபட்டு வெற்றி கண்ட “குமரித்தந்தை” மார்சல் நேசமணி பிறந்தநாளில் அவர் தம் தியாகத்தையும் தமிழுணர்வையும் போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.