தற்போதைய செய்திகள்

பிரக்ஞானந்தாவின் சாதனை தொடர வேண்டும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து

சென்னை,

நார்வே செஸ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரக்ஞானந்தாவின் சாதனை தொடர வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நார்வே செஸ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களின் வெற்றி இளைஞர்களை விளையாட்டில் ஈடுபடவும், சிறப்பாக விளையாடவும் ஊக்குவிக்கும். உங்களின் சாதனை தொடர வேண்டும். உலகத்தரம் வாய்ந்த போட்டிகளில் அதிக பதக்கங்களைக் குவிக்க வாழ்த்துகள்.

இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.