தற்போதைய செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்-மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்

மதுரை,

வைகாசி விசாகத்தை முன்னிட்டு கழக ஆட்சி மீண்டும் அமைந்திட வேண்டி திருப்பரங்குன்றத்தில் சிறப்பு பூஜை செய்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை மதுரை புறநகர் கிழக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்.

அறுபடை வீட்டின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பொதுமக்கள் பால்குடம் ஏந்தியும், வேல் குத்தியும், காவடி எடுத்தும் முருகனை வழிபட்டனர்.

அதனைத்தொடர்ந்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா தனது குடும்பத்தினருடன் பால்குடம் எடுத்து முருகபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து கழக ஒருங்கிணைப்பாளர்கள் பெயரில் சிறப்பு பூஜை செய்தார். இதனை தொடர்ந்து 5000 பேருக்கு அன்னதானம், பழங்கள் ஆகியவற்றை மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மாவட்ட இளைஞணி செயலாளர் வக்கீல் ரமேஷ் திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பகுதி கழக துணை செயலாளர் செல்வகுமார், வட்ட கழக செயலாளர் பொன்முருகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.