தற்போதைய செய்திகள்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையா? டாஸ்மாக் பாரா ?முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி

திருப்பத்தூர்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையா ? அல்லது டாஸ்மார்க் பாரா ? என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்தும், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி பேசியதாவது:-

வாணியம்பாடி நகரில் நடந்து முடிந்த திமுக நகர மன்ற துணைத்தலைவர் தேர்தலில், ஆளுங்கட்சி திமுகவினரின் கோஷ்டி மோதலால் வாணியம்பாடி அரசு மருத்துவமனை போர்க்களமாக காணப்பட்டது. திமுக நிர்வாகிகள் மருத்துவமனையில் நுழைந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதனால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜோலார்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் தேவராஜுயின் மகன் அரசு மருத்துவர் செந்தில்குமார் குடித்துவிட்டு பணிக்கு வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.நடந்து முடிந்த நகர மன்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுகவினிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டபோது, அரசு மருத்துவர் செந்தில்குமார் குடித்துவிட்டு மருத்துவமனையில் நுழைந்து மோதலில் ஈடுபட்டுள்ளார்.

இவர் மீது ஆளுங்கட்சியை சேர்ந்த திமுகவினரே புகார் அளித்தும் ஏன் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார் ? மாவட்ட ஆட்சியர் என்பவர் நடுநிலையாக செயல்பட வேண்டும் .ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இருக்கக் கூடாது. விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வாணியம்பாடி அரசு மருத்துவமனை எதிரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுவது உறுதி. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவர் செந்தில்குமார் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி பேசினார்.