சிறப்பு செய்திகள்

விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற வேண்டும்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரணநலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர், விஜயகாந்த் விரைவில் பரிபூரண நலம் பெற்று இல்லம் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.