முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை

தூத்துக்குடி
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கி பேசினார். அதன்பின்னர் அவர் கழக பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.