ஈரோடு

தி.மு.க உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் இணைந்தனர்

ஈரோடு,

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே.சி.கருப்பணன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தி.மு.க. உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் விலகி கழகத்தில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பெருந்துறை தொகுதி சென்னிமலை வடக்கு ஒன்றிய கழகம் சார்பாக ஒன்றிய கழக செயலாளர் ராம்ஸ் (எ) சி.பி.ராமசாமி தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தின் போது தி.மு.க மற்றும் பல்வேறு கட்சிகளிலிருந்து ஏராளமானோர் விலகி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை இணைச்செயலாளர் எஸ்.ஜெயக்குமார் எம்.எல்.ஏ, மாவட்ட அவைத்தலைவர் கே.சி.பொன்னுதுரை, இணை செயலாளர் மைனாவதி கந்தசாமி, பொருளாளர் கே.பி.எஸ்.மணி, ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ், விஜயன், சி.டி.ரவிச்சந்திரன், கே.சக்திவேல், தனசேகர், சார்பு அமைப்பு செயலாளர்கள் ஈ.வி.எம்.நடராஜ மூர்த்தி, மோகன சுந்தரம், அருணாச்சலம், மணிகண்டன், மார்ட்டின் ராஜ், பூக்கடை பிரகாஷ், கோவி கருப்புசாமி, விவேகானந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராதிகா ராமசாமி, ராசு (எ) தங்கவேல், பனையம் பள்ளிரவி,கே.ஏ.கருப்புசாமி, ஒட்டப்பாறை ஊராட்சி தலைவர் சுமதி தங்கவேல், சென்னிமலை பி.சதீஷ், ரமேஷ், ஜம்பு (எ) சண்முகசுந்தரம் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.