திருவண்ணாமலை

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக ஆலோசனை கூட்டம்

முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியன் பங்கேற்பு

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் வந்தவாசியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் பேசுகையில், வரும் 23ம் தேதி நடைபெறும் கழக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் டி.கே.பி.மணி, மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பி.ஜாகீர் உசேன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன், மாவட்ட ஆவின் தலைவர் பாரி பி.பாபு, நகர செயலாளர் எ.அசோக்குமார், ஓட்டல் பாஷா, வெங்கடேசன்,

ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் க.சங்கர், எம்.மகேந்திரன், திருமூலன், அருகாவூர் ரங்கநாதன், பச்சியப்பன், லோகேஷ்வரன், அர்ஜுனன், முனுசாமி, தங்கராஜ், குணசீலன், சி.துரை, ப.திருமால், ஜெயப்பிரகாசம், பொதுக்குழு உறுப்பினர்கள் பொய்யாமொழி, லதா குமார், பேராட்சி செயலாளர்கள் பாண்டியன், மூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.