தற்போதைய செய்திகள்

ரூ.73 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட சதுமுகை ஊராட்சியில் ரூ.73 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சதுமுகை ஊராட்சியில் ரூ.73 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளை தொடங்கி வைப்பதற்கான பூமிபூஜை ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சிவராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பண்ணாரி, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயவாளர் என்.என்.சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சதுமுகை அண்ணாநகரில் ரூ/4.07 லட்சம் மதிப்பீட்டிலும், ஆலத்து கோம்பையில் ரூ/7.14 லட்சம் மதிப்பிலும், நடுப்பாளையத்தில் ரூ.4.99 லட்சம் மதிப்பீட்டிலும், சதுமுகையில் ரூ. 8.77 லட்சம் மதிப்பீட்டிலும் கழிவு நீர் வடிகால் மற்றும் கான்கீரீட் தளம் அமைத்தும், செம்படார்பாளையத்தில் ரூ.13.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பரிசல்துறை தார்சாலையை திறந்து வைத்தும் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் வி.ஏ.பழனிசாமி, நாச்சிமுத்து, டி.எஸ்.பழனிசாமி, சத்தியமங்கலம் நகர செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம், எம்.பி.துரைசாமி, எஸ்.எம்.சரவணன், ஊராட்சி மன்ற துணை தலைவர்லோகநாதன், தேவமுத்து, தமிழ்செல்வி,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வசந்தி, மாணிக்கம், பழனிசாமி, மீனா முருகேசன், மலர்விழி சரவணக்குமார், காமராஜ், சரோஜா, வாத்தியார் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.