திருவள்ளூர்

அத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் திருவாலாங்காடு ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் திருவாலாங்காடு ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திருவலங்காடு ஒன்றியக்குழுத் தலைவர் ஜீவா விசயராகவன் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதன்பின்னர் மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் உணவை பரிமாறினார். இந்த ஆய்வின் போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) .அகஸ்டின், அருள்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மில்கி ராஜ், உதவியாளர் அசோக், தலைமை ஆசிரியர் மற்றும் மோ.இராமமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.