ம.பொ.சியின் தமிழுணர்வுக்கு தலை வணங்குகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

சென்னை,
ம.பொ.சியின் தமிழுணர்வுக்கு தலை வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டுமென முழக்கமிட்ட தமிழர் தலைவர்,”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்ற எல்லைப் போராட்டவீரர், சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்திட்ட “சிலம்புச் செல்வர்” ம.பொ.சியின் பிறந்தநாளில் அவர்தம் தமிழுணர்வுக்கு தலை வணங்குகிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.