தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆவார் -என்.ஆர்.தனபாலன் பேட்டி

எம்.ஜி.ஆர், அம்மாவை போல ஒரு உறுதியான தலைமையாக எடப்பாடியார் இருப்பார் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள். இதனை பெருந்தலைவர் மக்கள் கட்சியும் விரும்புகிறது. எடப்பாடியார் பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறி உள்ளார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

எடப்பாடியார் தலைமையில் அவர் பொது செயலாளர் ஆக வேண்டும் என்று அத்தனை தொண்டர்களும் விரும்புகிறார்கள். ஏன் என்றால் நான் தமிழகம் முழுவதும் சுற்றி வரும் காரணத்தினால் அவர்களுடைய மனநிலை அறிந்து சொல்கிறேன். நான் அவர்களுடைய மாவட்ட செயலாளர்களையோ, நிர்வாகிகளயே சந்தித்து நான் இதனை சொல்லவில்லை. மனநிலை அறிந்து சொல்கிறேன்.

கிட்டதட்ட நான்கரை ஆண்டுகள் நன்றாக ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி 30 நாட்கள் தான் நீடிக்கும் என்று
சொன்னார்கள். ஆனால் நான்கரை ஆண்டுகளில் எத்தனையோ இடர்களை எல்லாம் தவிடுபொடியாக்கி நல்லாட்சி செய்தார். தொண்டர்கள் தற்போது எதை விரும்புகிறார்கள் என்றால் உறுதியான ஒரு முடிவு எடுக்க கூடிய தலைமையை விரும்புகிறார்கள்.

எம்.ஜி.ஆர், அம்மாவை போல ஒரு உறுதியான தலைமையாக எடப்பாடியார் இருப்பார் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள். இதனை பெருந்தலைவர் மக்கள் கட்சியும் அதனை விரும்புகிறது. நீங்கள் பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.