தற்போதைய செய்திகள்

ரூ.37.72 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் -கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருப்பூர்

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.37.72 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பூர் பெருமாநல்லூர் எடுத்த குன்னத்தூர் ரோட்டில் ரூ.9.80 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளை திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் நேற்று காலை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதேபோல தொரவலூர் ஊராட்சி வாராணாசிபாளையம் கள்ளுமடை முதல் சேவை சாலை வரை ரூ.17.92 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பதற்கான பணியினையும், வள்ளிபுரம் ஊராட்சி, பசுமை நகர் பஸ் நிறுத்தத்தில் எதொகுதி வளர்ச்சி நிதி மூலம் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை பணியினையும், கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

ஈட்டிவீராம்பாளையம் ஊராட்சி, முட்டியன்கிணறு ஏடி காலனி பஸ் நிறுத்தத்தில் தொகுதி வளர்ச்சி நிதி மூலம் ரூ. 4.50 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி என மொத்தமாக ரூ.37.72 லட்சம் மதிப்பிலான பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கவுன்சிலர் வேல்குமார் சாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் சொர்ணாம்பாள், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், பட்டம்பாளையம் சொசைட்டி தலைவர் எஸ்.எம்.பழனிசாமி, பாசறை சந்திரசேகர், தங்கராஜ், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி தலைவர் ராதாமணி சிவசாமி, தொரவலூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவகி சம்பத்குமார், உதவி பொறியாளர் மனோஜ், தொரவலூர் சொசைட்டி தலைவர் அவனாசியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதேவி பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காந்திமதி, சொசைட்டி தலைவர் எவரெடி துரை, கழக நிர்வாகிகள் சுந்தரம், பழனிசாமி, சொசைட்டி தலைவர்கள் கிருஷ்ணசாமி, நடராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.