எடப்பாடியாருக்கு பெருகும் ஆதரவு – தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒரே தலைவர் என பெருமிதம்

சென்னை
கடந்த 23-ந்தேதி அன்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக பொதுக்குழு கூடியது. அப்போது அப்போது ஒற்றை தலைமை கோரிக்கையுடன் 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்த மனுவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்தார்.
அந்த பொதுக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று கழக பொதுக்குழு கூட்டம் மீண்டும் ஜூலை 11-ந்தேதி அன்று நடைபெறும் என்று கழக அவைத்தலைவர் அறிவித்தார்.
அதை்தொடர்ந்து கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் தலைமைக்கழகம்-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், நடைபெற்றது.
இதில் பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அது மட்டுமின்றி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என 99 சதவீதம் பேர் எடப்பாடியாரின் தலைமையை ஏற்க தயாராகி விட்டனர்.
இப்படிப்பட்ட சூழலில் கழக பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என்றும், தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்றும் நீதிமன்றத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றது கழகத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் தி.மு.க.வுடன் உறவு வைத்துள்ளது கண்டு கழகத்தினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மாவட்ட கழக செயலாளர்கள் முதல் கழகத்தின் தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள் வரை அவர்களிடத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு முற்றிலும் சரிந்து விட்டது. கழகத்தில் எடப்பாடியாரின் செல்வாக்கு முன்பை விட இப்போது அதிகரித்து விட்டது.
அதுமட்டுமின்றி எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களும், தொண்டர்களும் வெள்ளமென திரண்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இது எடப்பாடியாருக்கு ஆதரவு பெருகி இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள்̣ நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த மூன்றாம் தலைமுறையாக கழக தொண்டர்களின் மனசாட்சி, கழகத்தை வழிநடத்தக்கூடிய ஒரே ஒற்றை தலைமை எடப்பாடியார் தலைமையில் கழகம் செயல்படுவதற்கு பெரம்பலூர் மாவட்ட கழகத்தை சேர்ந்த 9 பொதுக்குழு உறுப்பினர்கள் அவரை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தோம்.
எடப்பாடியார் மட்டும் தான் இந்த கழகத்தை சிறப்பாகவும், பொலிவாகவும், தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய. மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே தலைவர் எடப்பாடியார் தான்.
எங்கள் மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் 23 பேர். அதில் 21 பேர் இங்கு வந்துள்ளோம். மீதம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் தொண்டர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு இங்கு வருவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.