தற்போதைய செய்திகள்

கோபி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

கோபி தொகுதி குள்ளம்பாளையம் ஊராட்சியில் ரூ.11.66 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, பா.வெள்ளாளபாளையம் ஊராட்சியில் முத்துக்காளிமடை, என்.பி.நகர் பகுதிகளில் ரூ.11.43 லட்சம் மதிப்பில் சிமெண்ட் தளம் வடிகால் அமைக்கும் பணி, வெள்ளாங்கோவில் ஊராட்சியில் கொளத்து பாளையம், சில்லாமடை பகுதிகளில் ரூ.7.30 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி, ரூ.8 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி,

காமராஜ் நகர் உள்ளிட்ட 5 இடங்களில் ரூ.6.40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, சிறுவலூர் குட்டையபாளையம் பகுதியில் ரூ.12.16 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, அயலூர் செம்மாண்டம்பாளையத்தில் ரூ.11.80 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி,

கலிங்கியம் ஊராட்சியில் ரூ.11.80 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி, அளுக்குளி ஊராட்சி கோபிபாளையத்தில் ரூ.11.80 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி என ரூ.1 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோபி ஒன்றியக்குழு தலைவர் கே.பி.மவுதீஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் வி.ஆர்.வேலுமணி, குறிஞ்சிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் அருள் ராமச்சந்திரா, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், கலிங்கியம் ஊராட்சி தலைவர் கோகிலா அருள் ராமச்சந்திரா,

கொளப்பலூர் பேரூராட்சி செயலாளர் தங்கராசு, ஒன்றிய கவுன்சிலர்கள் திலகவதி வாசு, பங்க் செல்வம், பத்மாவதி, வெள்ளாங்கோவில் ஊராட்சி தலைவர் ஆப்பிள் தன்னாசி, பா.வெள்ளாளபாளையம் ஊராட்சி தலைவர் சத்தியபாமா வேலுமணி, அளுக்குளி ஊராட்சி தலைவர் இந்து மதிபாண்டு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஞானசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.