சிறப்பு செய்திகள்

எடப்பாடியார் இல்லை என்றால் வேறு யாருமே இல்லை-கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபுமுருகவேல் அறிக்கை

சென்னை

தி.மு.க.வை எதிர்த்து வலிமையோடும், வலுவோடும் களமாட வேண்டும் என்றால் ஒற்றை தலைமை காலத்தின் கடடாயம். அது இன்று இல்லை என்றால் என்றும் இல்லை. எடப்பாடியார் இல்லை என்றால் வேறு யாருமே இல்லை என்று கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபுமுருகவேல் கூறி உள்ளார்.

கழக செய்தி தொடர்பாளரும், கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளரும், கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஆர்.எம்.பாபு முருகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இருக்க இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களில் 63 பேர் ஒரே நிலைப்பாட்டையும், இருக்கக்கூடிய தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் ஒரே நிலைப்பாட்டையும், இருக்கக்கூடிய பொதுக்குழு உறுப்பினர்களில் 2584 பேர் ஒரே நிலைப்பாட்டையும், ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒரு கோடியே 49 லட்சத்து 90 ஆயிரம் பேர் ஒரே நிலைப்பாட்டையும் எடுத்திருக்கும் இந்த வேளையில் நீங்கள் தொடுத்திருக்கும் இந்த சட்டப்போராட்டம் என்பது தற்காலிகமானது.

இறுதியில் சட்டப்போராட்டத்திலும் முழுமனதாக தகுதியோடு ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் on merits என்ற வகையில் எடப்பாடியார் கழகத்தின் ஒற்றைத்தலைமையாக வருவது திண்ணம்.

ஒன்றரை கோடி தொண்டர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும். அதுவும் எடப்பாடியார் தான் வேண்டும் என்றும், இருக்கக்கூடிய தலைமைக் கழக நிர்வாகிகள் 75 பேரில் 70 பேர் ஒற்றைத் தலைமை தான் வேண்டும், அதுவும் எடப்பாடியார் தான் வேண்டும் என்றும், இருக்கக்கூடிய மாவட்டக் கழக செயலாளர்களில் 75 பேரில் 70 பேர் ஒற்றைத் தலைமை தான் வேண்டும்.

அதுவும் எடப்பாடியார் தான் வேண்டும் என்றும், இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களில் 66 பேரில் 63 பேர் ஒற்றைத் தலைமை தான் வேண்டும் , அதுவும் எடப்பாடியார் தான் வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் முடியாது, ஒற்றை தலைமைக்கு நான் வழி விட மாட்டேன்.

அதே நேரத்தில் கழகத்தின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிப்பேன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா அவர்களின் கொள்கையில் இருந்து பிழன்று தி.மு.க.வோடு சமரசம் செய்து கொள்வேன் என்று இருக்கின்ற இந்த சூழ்நிலையில் பல பத்திரிகை ஊடக செய்தியாளர்களை சந்திப்பையும் ஏற்படுத்தி கழக கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக நீதிமன்றங்களுக்கு சென்று, காவல் நிலையங்களில் மனு

கொடுத்த மிகவும் கீழ்த்தரமான செயல்களில் இந்த இயக்கத்தின் தலைவரே ஈடுபடுகிறார் என்ற போது இதை எந்த தொண்டனும் மேற்சொன்ன பொதுக்குழு உறுப்பினர்களோ, தலைமை கழக நிர்வாகிகளோ, மாவட்ட கழக செயலாளர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ யாரும், எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்த இயக்கத்திற்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என்ற குரல் உங்களுடைய செயல்பாடடின் மூலமாக பன்னெடுங்காலமாக நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்து கொண்டிருக்கக்கூடிய செயல் தான் என்பதை ஓ.பன்னீர்செல்வம் அறிவார். ஆனால் அதற்கான முயற்சியை எடப்பாடியார் எந்த காலத்திலும் முன்னெடுத்ததாக நான் அறியவில்லை.

காலத்தின் கட்டாயம், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இருக்கிறது, சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தி.மு.க.வை எதிர்த்து வலிமையோடும், வலுவோடும் களமாட வேண்டும் என்றால் ஒற்றை தலைமை காலத்தின் கடடாயம். அது இன்று இல்லை என்றால் என்றும் இல்லை. எடப்பாடியார் இல்லை என்றால் வேறு யாருமே இல்லை.

இவ்வாறு கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் கூறி உள்ளார்.