ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

ஈரோடு
பவானி தொகுதி கவுந்தப்பாடி, ஓடத்துறை ஊராட்சிகளில் ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி கவுந்தப்பாடி ஊராட்சியில் தென்காட்டு பாளையம் காலனியில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி, பெருமாபாளையம் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வடிகால் உறிஞ்சு குழாய்கள் அமைக்கும் பணி,
ஓடத்துறை ஊராட்சியில் பனங்காட்டூர் காலனி, ரங்கன் காட்டூர், பாலப்பாளையம் பகுதியில் ரூ 16.50 லட்சம் மதிப்பில் பணிகள் என ரூ.30 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் பவானி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெகதீசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் சரவணன், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவாதங்கமணி, ஒன்றிய குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் செந்தில், ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி செயலாளர் கே.என்.ஆறுமுகம், ஊராட்சி கவுன்சிலர் மணி சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.