தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு தருமபுரியில் காத்திருப்பு போராட்டம்

தருமபுரி,
6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
காது கேளாதோருக்கு 80 சதவீதத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு குரூப் 4 தேர்வு இல்லாமல் வேலை வாய்ப்பு வரிசை அடிப்படையில் வழங்கிட வேண்டும்.
அரசு துறையில் 1 சதவீதம் வேலை வாய்ப்பு தர வேண்டும். தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கிடவும் மாத உதவி தொகையே வருவாய்த்துறைக்கு பதிலாக மாற்றுத்திறனாளி துறை மூலம் மாற்றி ரூபாய் 3000 உயர்த்தப்பட வேண்டும்.
வாரிசு அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். சிறப்பு ஆசிரியர் பயிற்சி மையங்களில் கட்டாயமாக சைகை மொழி பயிற்சி சேர்க்கப்பட வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகளை நல அலுவலகத்தில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்கள் அரசு செலவில் நியமிக்கப்பட வேண்டும்
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பழனிசாமி, துணைத்தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர் கார்த்திக், ராஜேஷ்குமார், சிலம்பரசன்,ஜெபி அழகன், பெரியசாமி, சிலம்பரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.