குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

சென்னை,
அரசியலிலும் பொதுவாழ்விலும் போற்றத்தக்க செயல்கள் புரிந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடுவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அரசியலிலும் பொதுவாழ்விலும் போற்றத்தக்க செயல்கள் புரிந்த வெங்கையா நாயுடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.