திருவள்ளூர்

எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி

பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன் பேட்டி

எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி என்று பூந்தமல்லி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான இரா.மணிமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

திமுக அரசின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் சட்டமன்றத்தில் சிம்ம சொப்பனமாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விளங்கி வருகிறார். வருகின்ற 11-ம்தேதி கழக தொண்டர்களால் எடப்பாடி கே.பழனிசாமி பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்பது உறுதி.

திமுக அரசு பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த விடியா அரசை விரைவில் மக்கள் தூக்கி எறிந்து விட்டு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் கழக ஆட்சி மலரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிவின் போது பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் நேமம் ராகேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் பி.சி.விஜய கருணாகரன், ஒன்றிய அவைத்தலைவர் ஏழுமலை, பூந்தமல்லி ஒன்றிய இணை செயலாளர்கள் நர்மதா ராஜசேகர், பூந்தமல்லி ஒன்றிய பொருளாளர் சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் உஷா குணசேகரன், கருணாநிதி, ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் பத்மநாபன், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் சுகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் குமார், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கிரண்குமார், ரகு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கோவர்தனன், துணை செயலாளர் முகேஷ் மற்றும் நேமம் பாலாஜி, பூந்தமல்லி ஒன்றிய கழக கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.