தற்போதைய செய்திகள்

திருப்பூர் வடக்கு தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணி

கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருப்பூர்

திருப்பூர் வடக்கு தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள பரமசிவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் சத்துணவுக்கூடம் கட்டும் பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து பொங்குபாளையம் மாரியம்மன் கோவில் அருகில் ரூ.5.02 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை பணி, காளம்பாளையம் சிவசக்தி நகர் பகுதியில் ரூ. 7.31 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, கிருஷ்ணா நகர் பகுதியில் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றியக்குழு தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் வேல்குமார் எம்.சாமிநாதன், ஒன்றிய பேரவை செயலாளர் எஸ்.எம்.பழனிசாமி, ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா வடிவேல், துணைத்தலைவர் ஜெயக்குமார், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி பரமசிவம், இந்திராணி பாரதிராஜா, முன்னாள் தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி செயலாளர் வடிவேல், மாவட்ட மாணவரணி மகாலிங்கம், மாவட்ட மீனவர் அணி பரமசிவம், கழக நிர்வாகிகள் சுப்பிரமணியம், வேலுச்சாமி, சிவராஜ், பரமசிவம், துரைசாமி, சங்கர், சிவக்குமார், செந்தில், சண்முகம், சுரேஷ், தமிழ்ச்செல்வன், ராமச்சந்திரன், கார்த்தி ரஞ்சித் கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.