வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம் -முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணியில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து மாவட்ட கழக செயலாளர் தூசி.கே.மோகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் பேசியதாவது:-
12, 13ம்தேதிகளில் வாக்காளர் சேர்ப்பது குறித்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தங்கள் பகுதியில் உள்ள 17 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும். விடுபட்டுள்ள வாக்காளர்கள் பெயர்களை சேருங்கள். வெளியூர் மாறுதலானவர்கள், காலமானவர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்களை நீக்கம் செய்யுங்கள்.
தற்போது உள்ள வாக்காளர்கள் பெயர்கள் உள்ளதா எனவும் சரி பாருங்கள், வாக்காளர்கள் சேர்க்கும்போது ஆதார் அட்டை ஜெராக்ஸ் இணைக்கவும். இம்முகாம் மாத கடைசியில் 26, 27ம் தேதிகளில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு வந்துள்ள நகர ஒன்றிய, பேரூர்க ழகத்தினர் கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்
ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் தெரிவித்து வாக்காளர்கள் சேர்க்கும் முகாமில் அதிகப்படியான வாக்காளர்களை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் பேசினார்.